'ஒப்பந்த கூலி வழங்காவிட்டால் மீண்டும் விசைத்தறி போராட்டம்'

சோமனுார், : ஒப்பந்தபடி கூலி உயர்வை, ஜவுளி உற்பத்தியாளர்கள் அமல்படுத்தாததால், விசைத்தறியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம், நேற்று சோமனுாரில் நடந்தது.
சோமனூர் சங்க தலைவர் பூபதி தலைமை வகித்தார். செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் ஈஸ்வரன் மற்றும் கிளை சங்க பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
புதிய கூலி உயர்வு பல பகுதிகளில் வழங்கப்படாதது குறித்து விவாதிக்கப்பட்டது. 'ஜவுளி உற்பத்தியாளர்கள், கூலி உயர்வை உடனே வழங்க வேண்டும்' என்பது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
பல கட்ட போராட்டங்களுக்கு பின், ஏப்., 20ல் கலெக்டர் முன்னிலையில், கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 21ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டிய கூலி உயர்வை, ஒரு மாதத்துக்கும் மேலாகியும், ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கவில்லை. இதனால், விசைத்தறியாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இரு வாரங்களுக்குள் புதிய கூலி உயர்வை வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் முன் வரவேண்டும். அதற்கு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால், மீண்டும் போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
தி.மு.க., பிரமுகர் படுகொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள்
-
துணைவேந்தர் நியமனத்திற்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
-
பிரீமியர் கிரிக்கெட் பைனல்: பஞ்சாப் அணிக்கு 191 ரன் இலக்கு
-
அரையிறுதியில் சபலென்கா-ஸ்வியாடெக் * பிரெஞ்ச் ஓபனில்...
-
இந்தியா-தாய்லாந்து மோதல் * நட்பு கால்பந்தில்...
-
இரண்டாவது சுற்றில் சிந்து * இந்தோனேஷிய பாட்மின்டனில்...