ஓடும் பஸ்சில் மொபைல் திருடிய 3 பேர் கைது

சேலம்: சேலம், வீராணம் அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டியை சேர்ந்தவர் செந்தில், 43. இவர் உறவினருடன் நேற்று காலை, 10:30 மணிக்கு டவுன் பஸ்சில், சேலம் புது பஸ் ஸ்டாண்டுக்கு புறப்பட்டார். டி.வி.எஸ்., ஸ்டாப் வந்தபோது, செந்தில் சட்டை பாக்கெட்டில் இருந்த, 'மோட்டோரோலா' மொபைல் போன் திருடுபோனது. சக பயணியரிடம் விசாரிப்பதற்குள், பஸ், புது பஸ் ஸ்டாண்ட் வந்தது.


பின் அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்தனர். சிறிது நேரத்தில், பஸ் ஸ்டாண்டில் வலம் வந்த சந்தேக நபர்கள், 3 பேரை பிடித்து விசாரித்ததில், சேலம், முள்ளுவாடி கேட்டை சேர்ந்த ஜாபர் அலி, 39, செவ்வாய்ப்பேட்டை வசந்த், 20, கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜா, 38, என்பதும், இவர்கள் செந்திலிடம் மொபைல் திருடியதும் தெரிந்தது. இதனால், 3 பேரையும் கைது செய்து, மொபைலை மீட்டனர். மேலும் விசாரணையில், ஜாபர் அலி மீது, 27 மொபைல் திருட்டு வழக்கு, வசந்த் மீது, 5 வழக்கு, ராஜா மீது, 2 வழக்குகள் இருப்பது தெரியவந்தது

Advertisement