அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்: புலனாய்வு அமைப்பு விசாரணை!

வாஷிங்டன்: அமெரிக்காவில் போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில், காசாவில் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து ஒருவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். இது பயங்கரவாத தாக்குதல் என விசாரணையில் தெரியவந்தது. இதனால் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., விசாரணையை துவக்கி உள்ளது. இதனை எப்.பி.ஐ., இயக்குனர் காஷ்படேல் உறுதி செய்தார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொலராடோவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். எங்கள் குழு அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து முக்கிய தகவல்களை சேகரித்து வருகிறோம். மேலும் விசாரணைக்கு பிறகு, பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் விவரம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.