பயங்கரவாதிகளுக்கு உடந்தை: கூட்டாளிகள் 5 பேர் காஷ்மீரில் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதியில் பி.எஸ்.ஏ., எனப்படும் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர் போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் 5 பயங்கரவாத கூட்டாளிகள் மீது கடுமையான பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 5 பேரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு , மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்தல் ஆகிய குற்றங்களை செய்தனர்.மேலும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் குற்றவியல் கூறுகளுக்கு எதிரான நாசவேலை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கைதானவர்கள்,கமந்தர் பந்தசவுக்கில் வசிக்கும் நயீம் அகமது கான்; கன்யாரின் கௌசியா காலனியில் வசிக்கும் பைசான் அக்தர் பட்; பாண்டச்சில் வசிக்கும் மெஹ்ராஜ் உத் தின் பட்; ஹஸ்ரத்பாலின் அசார் காலனியில் வசிக்கும் உமர் ஹமீத் ஷேக்; மற்றும் நகரின் ரெய்னாவாரி பகுதியில் உள்ள திவாட் வாலிபோராவில் வசிக்கும் சுஹைப் ஷாபி பாபா என்ற சம்னா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடம்மேற்கொண்டு விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர்
-
ஒய்வுக்கு பின் ஒருபோதும் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் திட்டவட்டம்
-
எஸ்.பி., அலுவலகத்தில் விவசாயி தீக்குளித்து தற்கொலை முயற்சி; தர்மபுரியில் அதிர்ச்சி
-
வேகமெடுக்கும் மனோன்மணியம் பல்கலையில் வினாத்தாள் கசிந்த வழக்கு; சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற பரிந்துரை
-
இண்டி. கூட்டணிக்கு 'டாட்டா' காட்டிய ஆம் ஆத்மி: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ல் தொடக்கம்; மத்திய அரசு அறிவிப்பு