கன மழை, நிலச்சரிவால் சிக்கிமில் தவித்த 1,678 பயணிகள் மீட்பு

காங்டாக்: கன மழை மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சிக்கிம் மாநிலத்தில் 1,678 சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.லாச்சென் பகுதியில் 100 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
சிக்கிமில் கடந்த மே 29 முதல் தொடர்ந்து பெய்த மழையால் மங்கன் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன, பிடாங் மற்றும் சங்க்காலாங்கில் உள்ள பாலங்கள் சேதமடைந்தன, மேலும் பல நாட்களாக சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. சில நாட்களுக்கு பின்னர் சிக்கித்தவித்த 1,678 பயணிகள் இன்று பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். லாச்செங்கில் 100 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிக்கிம் டிஜிபி அக்ஷய் சச்தேவா கூறியதாவது:
எல்லைச் சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) மங்கன் மாவட்டத்தில் உள்ள லாச்சுங்கிற்கு சாலை இணைப்பை மீட்டெடுத்த பிறகு சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் பணி தொடங்கியது.
லாச்சுங் மற்றும் சுங்தாங் நகரங்களில் சிக்கித் தவிக்கும் 1,678 சுற்றுலாப் பயணிகள் 284 வாகனங்கள் மற்றும் 16 மோட்டார் சைக்கிள்கள் மூலம் டிசோங்கு நகரத்திற்கு அருகிலுள்ள பிடாங் வழியாக காங்டாக்கிற்கு புறப்பட்டனர்.லாச்சனில் சிக்கித் தவிக்கும் 100க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் முயற்சிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அக்ஷய் சச்தேவா கூறினார்.
மேலும்
-
ஒய்வுக்கு பின் ஒருபோதும் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் திட்டவட்டம்
-
எஸ்.பி., அலுவலகத்தில் விவசாயி தீக்குளித்து தற்கொலை முயற்சி; தர்மபுரியில் அதிர்ச்சி
-
வேகமெடுக்கும் மனோன்மணியம் பல்கலையில் வினாத்தாள் கசிந்த வழக்கு; சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற பரிந்துரை
-
இண்டி. கூட்டணிக்கு 'டாட்டா' காட்டிய ஆம் ஆத்மி: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ல் தொடக்கம்; மத்திய அரசு அறிவிப்பு
-
பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது மலேசியா!