மூதாட்டி கழுத்தை அறுத்து நகை பறிக்க முயற்சி

ஜோலார்பேட்டை :ஜோலார்பேட்டை அருகே, மூதாட்டி கழுத்தை அறுத்து, நகையை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடுகின்றனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் முனியம்மாள், 64. இவர், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே வாடகை வீட்டில் தனியாக வசிக்கிறார். நேற்று காலை, 6:00 மணியளவில், அடையாளம் தெரியாத நபர் அவரது வீட்டிற்குள் புகுந்து, மூதாட்டி கழுத்தை கத்தியால் அறுத்து, அவர் அணிந்திருந்த நகை, கவரிங்கா, தங்கமா எனக் கேட்டுள்ளார்.

இதில், முனியம்மாள் மயங்கினார். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பினார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், மூதாட்டியை மீட்டு, சிகிச்சைக்காக திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஜோலார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement