மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேர் கைது

பாபநாசம் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர், 17 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமி. இவரது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன் நட்பாக பழகி, 8 மாதங்களுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அஜித்குமார், 28, என்பவரிடம் கூறியுள்ளார். இரு மாதங்களுக்கு முன், 17 வயது சிறுமியை அஜித்குமாரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். சிறுமியின் பெற்றோர் பாபநாசம் மகளிர் போலீசில், நேற்று முன்தினம் புகார் அளித்தனர். விசாரணையில், 17 வயது சிறுவன், அஜித்குமார் சிறுமியை வன்கொடுமை செய்தது தெரியவந்தது. போக்சோவில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement