மாறி மாறி வரி விதித்து வர்த்தக பதட்டம்; தீர்வு காண அதிபர் டிரம்ப், சீன அதிபர் பேச்சுவார்த்தை!

வாஷிங்டன்: வர்த்தக பதட்டங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்கா பொருட்களுக்கு சீனா அதிக வரி விதித்து வருகிறது என அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனையடுத்து சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க துவங்கினார். இதற்கு பதிலடியாக சீனாவும் வரி விதிக்க, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் துவங்கியது.
ஒரு கட்டத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீதம் வரி விதித்தது. இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தன. மேலும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்னர், வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டது என அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்நிலையில், வர்த்தக பதட்டங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த வாரம் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வரி விதிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பது, உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: வர்த்தக பதட்டங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அதிக வரி விதிப்பு மற்றும் பிற வர்த்தக பிரச்னைகளை தீர்க்க முக்கிய முடிவு எடுக்கப்படும், என்றார்.



மேலும்
-
டி.என்.பி.எஸ்.சி., புது நடைமுறை தேர்வு பொறுப்பாளர்களுக்கு பயிற்சி
-
சண்முக நதியில் மீட்பு ஒத்திகை
-
வரும் 12 வரை நடக்கும் வேளாண் வளர்ச்சி பிரசாரம்
-
கல்வி துறைக்கு ரூ.47 ஆயிரம் கோடி ஒதுக்கியவர் ஸ்டாலின் அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்
-
மாற்றுத்திறனாளி கர்ப்பம் 2 பேரிடம் விசாரணை
-
செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் மாணவர் சேர்க்கை