சாலையோர வீட்டுக்குள் புகுந்தது கார் : ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் பலி

நாசிக்: மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு வீட்டினுள் வேகமாக சென்ற கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இதில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு கல்வான் தாலுகாவில் உள்ள கோலாப்பூர் பாட்டாவில் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தகவல் அறிந்த கல்வான் போலீசார் கூறியதாவது:
மாநிலத்தின் சாட்டனாவில் உள்ள நாம்பூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நாசிக்கில் நடைபெற்ற உறவினரின் திருமண விழாவிற்கு சென்றுவிட்டு, தங்களின் வீட்டிற்கு திரும்பும் போது, அதிவேகமாக சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, நாசிக்-கல்வான் சாலையில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தது.
இதில் வீட்டில் இருந்த 4 பேர் உள்பட 5 பேர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவர்கள் ஷாய்லா வசந்த பதன் 62, அவரது மகள் மாதவி மேத்கர் 32, அவரது பேத்தி திரிவேனி மேத்கர் 4, அவரது உறவினர் சர்லா பாலசந்திர பதன் 50, டிரைவர் கலிஹ் மஹமூத் பதன் 50, என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேத்கரின் 12 வயது மகன் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சை பலனளிக்காத நிலையில் மகனும் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவர்களது உறவினர் பாலசந்தர பதன் 52, பலத்த காயங்களுடன் சிகிச்சையில் உள்ளார். கார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.



மேலும்
-
இந்திய ஜோடி ஏமாற்றம்
-
இதற்கு மேல் அரசு என்ன செய்ய வேண்டும்: கர்நாடக துணை முதல்வர் கேள்வி
-
நான் பேசியதை அண்ணாமலை வெளியிடட்டும்: அமைச்சர் மா.சு., பதில்
-
சிந்து நதி ஒப்பந்தம் வேண்டும்: இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்!
-
திருச்செந்தூர் கோவிலில் ஜூலை 7ல் குடமுழுக்கு விழா!
-
வங்கதேசத்தில் ஏப்ரல் 2026ல் தேர்தல்: குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த யூனுஸ்