கைப்பந்து போட்டி பரிசளிப்பு விழா

விழுப்புரம்; கோலியனுாரில் ஒன்றிய அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
கோலியனுார் ஒன்றியம், நரையூரில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, தி.மு.க., சார்பில் ஒன்றிய அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. இதில், கோலியனுார், வளவனுார் சுற்று வட்டாரத்திலிருந்து 20 கைப்பந்து அணியினர் பங்கேற்றனர்.
நிறைவு விழாவில், விழுப்புரம் தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., முதல் 3 இடங்களைப் பிடித்த அணியினருக்கு பரிசு தொகை மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார்.
ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட விவசாய அணி கேசவன், வழக்கறிஞர் கண்ணப்பன், ஒருங்கிணைப்பாளர் காண்டீபன், ஜெயபால், ஸ்ரீதர், ஜெயந்தி ராஜகணேஷ், சவுந்தரராஜன், குணசேகரன், ஊராட்சி துணைத் தலைவர் ஜெயமாலினி, முன்னாள் தலைவர் கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
தென் மாநிலங்களின் ஜனநாயக வலிமை குறையும்: முதல்வர் ஸ்டாலின்
-
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
-
டில்லியில் சட்ட விரோத குடியேற்றம்: வெளிநாட்டினர் 71 பேர் நாடு கடத்தல்
-
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்: 3ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்த பணம் எங்கிருந்து வந்தது: துணை ஜனாதிபதி கிடுக்கிப்பிடி கேள்வி
-
டில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல்: மர்ம நபரை தேடும் போலீஸ்