டில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல்: மர்ம நபரை தேடும் போலீஸ்

புதுடில்லி: டில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் டில்லியில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், முதல்வர் ரேகா குப்தாவை கொலை செய்யப் போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
உடனடியாக இந்த சம்பவம் குறித்து காசியாபாத் போலீசார், டில்லி போலீசாருக்கு தகவல் அனுப்பினர். இதையடுத்து, முதல்வர் ரேகா குப்தாவுக்கு பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அவரின் அதிகாரப்பூர்வ இல்லமும் கூடுதல் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது.
தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த நபர் தற்போது அந்த போனை அணைத்து வைத்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலி ஆப் மூலம் லிங் அனுப்பி ரூ.54 லட்சம் மோசடி: அசாம் வாலிபர் கைது
-
குழந்தை திருமணங்களால் கர்ப்பமாகும் சிறுமியர்
-
தமிழகம், புதுச்சேரியில் 10 முதல் கனமழை: வானிலை மையம் தகவல்
-
'ஆன்லைன் டிரேடிங்கில்' பல கோடி மோசடி; ம.பி., ஆசாமி கைது
-
சாலையோரம் நின்ற காரில் பாதிரியார் சடலமாக மீட்பு
-
பயிர்க்கடனுக்கு 'சிபில் ஸ்கோர்' விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
Advertisement
Advertisement