வெளிநாட்டு வேலை ஆசை ரூ.60 ஆயிரம் இழந்த நபர்
புதுச்சேரி; சாரம் பகுதியை சேர்ந்த நபர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை ஆன்லைனில் பார்த்துள்ளார். இதையடுத்து, அதிலிருந்த மொபைல் எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது, எதிர்முனையில் பேசிய நபர் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அந்த வேலைக்கு விசா கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார்.
இதை நம்பிய, அவர் மர்மநபருக்கு 60 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
இதேபோல், சாரத்தை சேர்ந்த பெண் 32 ஆயிரம், சோரப்பட்டை சேர்ந்த நபர் ஆயிரத்து 100, ஜி.என்.பாளையத்தை சேர்ந்த பெண் 1,000 என மொத்தம் 4 பேர் மோசடி கும்பலிடம் 94 ஆயிரத்து 100 ரூபாய் இழந்துள்ளனர்.
புகார்களின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தென் மாநிலங்களின் ஜனநாயக வலிமை குறையும்: முதல்வர் ஸ்டாலின்
-
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
-
டில்லியில் சட்ட விரோத குடியேற்றம்: வெளிநாட்டினர் 71 பேர் நாடு கடத்தல்
-
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்: 3ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்த பணம் எங்கிருந்து வந்தது: துணை ஜனாதிபதி கிடுக்கிப்பிடி கேள்வி
-
டில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல்: மர்ம நபரை தேடும் போலீஸ்
Advertisement
Advertisement