பெங்களூருவை உலுக்கிய துயர சம்பவம்; நடந்தது இப்படித்தான்!

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று (ஜூன் 04) காலை 7.01 மணிக்கு அறிவிக்கப்பட்ட வெற்றி அணி வகுப்பு மாலை 6 மணிக்கு சோகத்தில் முடிந்தது.
ஐ.பி.எல்., கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வரவேற்க, சின்னசாமி மைதானம் முன் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் திரண்டது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் நெரிசலில் சிக்கி, ஒரு பெண் உட்பட 11 பேர் பலியாகினர்.








நேற்று (ஜூன் 04) புதன் கிழமை
காலை 7.01 மணி: விதான சவுதாவிலிருந்து சின்னசாமி மைதானம் வரை வெற்றி அணிவகுப்பை பெங்களூரு அணி அறிவித்தது.
காலை 11 மணி
கிரிக்கெட் வீரர்களை வரவேற்க காலை 11 மணி முதல் சின்னசாமி மைதானம் மற்றும் விதான சவுதாவில் ரசிகர்கள் குவிந்தனர்.
காலை 11.50 மணி
சின்னசாமி மைதானத்தில்
மாலை 5 மணிக்கு பாராட்டு விழாவை போலீசார் அறிவித்தனர். திறந்தவெளி பஸ்சில் பேரணி நடத்தப்படுமா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மதியம் 2.10 மணி
மதியம் 2.10 மணிக்கு எச்.ஏ.எல் விமான நிலையத்தில், பெங்களூரு கிரிக்கெட் அணியினர் வந்து இறங்கினர். அவர்களை துணை முதல்வர் சிவகுமார் வரவேற்றார்.
மதியம் 3.14 மணி
வெற்றி பேரணியில் கலந்து கொள்ள பாஸ்களை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளுங்கள் என பெங்களூரு கிரிக்கெட் அணி அறிவித்தது.
மதியம் 3.30 மணி
அணிவகுப்பு நடந்தால் அதற்குத் தயாராக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் ரசிகர்கள் கூடுதலாக உற்சாகம் அடைந்தனர்.
மாலை 3.45 மணி
சின்னசாமி மைதானம் கேட் முன்பு கூட்டம் அலைமோதியது.
மாலை 4.30 மணி
விதான சவுதாவுக்கு மாலை 4.30 மணிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், கவர்னர் ஆகியோர் வந்தனர்.
மாலை 4.30 மணி
கூட்ட நெரிசல் போன்ற சூழ்நிலை காரணமாக கப்பன் பூங்கா மற்றும் விதான சவுதாவில் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டன.
மாலை 4.50 மணி
பெங்களூரு கிரிக்கெட் அணியினர் மாலை 4.50 மணிக்கு விதான சவுதாவில் மேடையை அடைந்தனர்.
மாலை 4.51 மணி
கேட் 7ல் உள்ள சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
மாலை 5.35 மணி
பெங்களூரு கிரிக்கெட் அணி வீரர்கள் மைதானத்தில் டிரஸ்ஸிங் ரூம் பால்கனியில் இருந்து கோப்பையைக் காட்டுகிறார்கள். அப்போது அவர்களுடன் துணை முதல்வர் சிவகுமார் உடன் இருந்தார்.
மாலை 6 மணி அளவில் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்து வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது. இந்த சம்பவம் அனைவருக்கும் பெரும் சோகத்தையும், மன உளைச்சலையும் கொடுத்துவிட்டு சென்றுள்ளது.
வாசகர் கருத்து (34)
அசோகன் - ,
05 ஜூன்,2025 - 15:56 Report Abuse

0
0
Reply
vijai hindu - ,
05 ஜூன்,2025 - 15:16 Report Abuse

0
0
Reply
உ.பி - ,
05 ஜூன்,2025 - 14:39 Report Abuse

0
0
Reply
Pandi Muni - Johur,இந்தியா
05 ஜூன்,2025 - 13:53 Report Abuse

0
0
Reply
rajasekaran - neyveli,இந்தியா
05 ஜூன்,2025 - 13:41 Report Abuse

0
0
Reply
பெரிய குத்தூசி - Chennai,இந்தியா
05 ஜூன்,2025 - 12:49 Report Abuse

0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
05 ஜூன்,2025 - 12:41 Report Abuse

0
0
Reply
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
05 ஜூன்,2025 - 12:18 Report Abuse

0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
05 ஜூன்,2025 - 12:14 Report Abuse

0
0
Reply
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
05 ஜூன்,2025 - 12:06 Report Abuse

0
0
Reply
மேலும் 24 கருத்துக்கள்...
மேலும்
-
தென் மாநிலங்களின் ஜனநாயக வலிமை குறையும்: முதல்வர் ஸ்டாலின்
-
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
-
டில்லியில் சட்ட விரோத குடியேற்றம்: வெளிநாட்டினர் 71 பேர் நாடு கடத்தல்
-
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்: 3ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்த பணம் எங்கிருந்து வந்தது: துணை ஜனாதிபதி கிடுக்கிப்பிடி கேள்வி
-
டில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல்: மர்ம நபரை தேடும் போலீஸ்
Advertisement
Advertisement