பா.ம.க., நிறுவனர் ராமதாசை சந்தித்தது ஏன்? ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி

29

விழுப்புரம்: ''பா.ஜ.,வுக்காக பேச வரவில்லை. நண்பர் என்ற முறையில் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினேன்'' என 3 மணி நேர பேச்சுவார்த்தை முடிவில், நிருபர்கள் சந்திப்பில் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தார்.


பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாசை நேரில் சந்தித்து அன்புமணி பேசினார்.

இதற்கிடையே ராமதாசுடன் ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அ.தி.முக.,வை சேர்ந்த சைதை துரைசாமி உடன் இருந்தார். ராமதாஸ் உடன் 3 மணி நேரமாக குருமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார்.




பின்னர் நிருபர்கள் சந்திப்பில் குருமூர்த்தி கூறியதாவது: பா.ஜ.,வுக்காக பேச வரவில்லை. நீண்ட கால நண்பர் ராமதாஸ். எனது நீண்ட கால நண்பர் ராமதாசை சந்தித்து பேசினேன்.
வேறு ஏதும் இல்லை.


நட்பு ரீதியாக சந்தித்து நீண்ட நேரமாக பேசினேன். பா.ஜ,வுக்காக நான் தைலாபுரம் வரவில்லை. நண்பர் என்ற முறையில் சந்திக்க வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமாதானம் பேச வந்தீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்று ஆடிட்டர் குருமூர்த்தி பதில் அளித்தார்.

Advertisement