மினி வேன் மோதி மீனவர் பலி
காரைக்கால்; காரைக்காலில் மினி வேன் மோதி மீனவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம், அக்கரைபேட்டை, டாட்டா நகரை சேர்ந்தவர் சண்முகநாதன், 34; மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
இவர் ஊரில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக காரைக்கால் மேட்டிற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு பைக்கில் சென்று கொண்டிருந்தார். திருபட்டினம் பைபாசில் சென்றபோது, அவ்வழியாக வந்த மினி வேன் (டி.என் 51 ஏ.பி., 4287) மோதி, சண்முகம் தலையில் படுகாயமடைந்தார்.
அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்து ஏற்படுத்திய மினி வேன் டிரைவர் முத்தையா, 26, என்பவர் மீது திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'அண்ணன் பொங்கி எழுந்துட்டாரு!'
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு: குஜராத்தில் காங்., தலைவர் கைது
-
ரூ.45 லட்சம் வெகுமதி: இருமாநிலங்கள் தேடிய இன்னொரு நக்சலைட் தலைவன் சுட்டுக் கொலை
-
இந்திய ஜோடி ஏமாற்றம்
-
இதற்கு மேல் அரசு என்ன செய்ய வேண்டும்: கர்நாடக துணை முதல்வர் கேள்வி
-
நான் பேசியதை அண்ணாமலை வெளியிடட்டும்: அமைச்சர் மா.சு., பதில்
Advertisement
Advertisement