'அண்ணன் பொங்கி எழுந்துட்டாரு!'

சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்தில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.
இதில், 63வது வார்டு காங்., கவுன்சிலர் சிவராஜசேகரன் பேசும்போது, 'புதுப்பேட்டை பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும், கண்டுகொள்வதில்லை. நான் கவுன்சிலரான நாளில் இருந்து மின் தடை தொடர்கிறது' என, ஆவேசமாக குற்றம் சாட்டினார். அப்போதைக்கு அவரை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.
ஆயினும், இது மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் கவனத்துக்கு போக, 'உள்ளாட்சி பிரதிநிதிகளின் புகார்களை உதாசீனப்படுத்தாதீங்க' என்று மின்வாரிய பொறியாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளார். இதையடுத்து, புதுப்பேட்டை பகுதியில் மின் தடைக்கான பிரச்னைகளை சரி செய்யும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்தன.
இதைப் பார்த்த சிவராஜசேகரனின் ஆதரவாளர் ஒருவர், 'அண்ணன் பொங்கி எழுந்ததும் தான் பிரச்னை முடிவுக்கு வந்திருக்கு...' எனக்கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.
மேலும்
-
சித்தராமையா, டி.கே. சிவகுமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
-
வர்த்தக பதட்டம்: அமெரிக்காவும் சீனாவும் ஜூன் 9ம் தேதி பேச்சுவார்த்தை; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; ஈமு பார்ம்ஸ் இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை
-
நார்வே செஸ் போட்டியில் 7வது முறை பட்டம் வென்றார் கார்ல்சன்; 3வது இடத்தை பிடித்தார் குகேஷ்!
-
பொது இடங்களில் சிலைகள் நிறுவ அனுமதி வழங்கக்கூடாது; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கில் இயக்குனர்கள் கைது