மின்கம்பியில் எறியும் பூமாலையால் மின்தடை

கூடலுார்: கூடலுார் மயான சாலையில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லும்போது பூமாலைகளை மின்கம்பியில் எறிவது தொடர்ந்துள்ளது. இதனால் மழை நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

இதுகுறித்து மின்வாரியத்தினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் பூமாலைகளை எறிவதை நிறுத்தவில்லை. மயான சாலையில் உயர் மின் அழுத்த கம்பியும் அருகில் செல்வதால் மின்தடை ஏற்படும் போது நீண்ட நேரம் அப்பகுதி இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பூமாலை வீசுபவர்களை கண்டறிந்து கூடுதல் அபராத தொகை விதித்தால் மட்டுமே இதனை தடுக்க முடியும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement