அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை

சென்னை: ''தி.மு.க., அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்'' என மா.செ., கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
தி.மு.க., மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜூன் 7) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டசபை உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது, முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
* ஒவ்வொரு பூத்திலும் 30 சதவீத வாக்காளர்களை சேர்க்க வேண்டும்.
* பொதுமக்கள், வாக்காளர்கள் கூறும் குறைகளை கேட்டு, பொறுமையுடன் பதில் அளிக்க வேண்டும்.
* தி.மு.க., அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
*கடமைக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம். 30% புது வாக்காளர்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தின் உரிமைகள் காக்கப்படவும், அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை ஓரணியில் தமிழகம் என மக்களை இணைத்திட, மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டசபை உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் பங்கேற்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம். "களம் 2026" தேர்தல் பிரசாரத்தை இப்போதே தொடங்கும் விதமாக மக்களைச் சந்திக்கப் புறப்படும் கட்சியினரின் ஒவ்வொரு நகர்வும் வெற்றிபெறத் தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.












மேலும்
-
கோகோ காப் புதிய சாம்பியன்: பிரெஞ்ச் ஓபனில் அசத்தல்
-
இங்கிலாந்து அணி வெற்றி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது
-
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; முதல்முறையாக மகுடம் சூடிய கோகோ கப்!
-
டேபிள் டென்னிஸ்: ஜெய்ப்பூர் ஜெயம்
-
இந்தியா 'ஏ' அணி தடுமாற்றம்
-
பயங்கரவாதிகளை வளர்க்கும் நாடு: பாக்., மீது அனுராக் தாக்கூர் எம்.பி.,குற்றச்சாட்டு