சிவகாசியில் பாதாள சாக்கடை பணி கணக்கெடுப்போடு நிற்குது * மற்ற வேலைகள் துவங்க எதிர்பார்ப்பு

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக முதற்கட்ட பணியான கணக்கெடுப்பு மட்டுமே நடந்துள்ள நிலையில் விரைவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை துவக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசி மநகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்க சிவகாசி திருத்தங்கல் இரண்டும் சேர்த்து 179 கிலோமீட்டர் துாரம் பாதாள சாக்கடை அமைக்க கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஆணையூர், விஸ்வநத்தம், நாரணாபுரம், அனுப்பன்குளம், செங்கமல நாச்சியாபுரம் உள்ளிட்ட 9 ஊராட்சிகள் தற்போது மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதாள சாக்கடை திட்டத்தின் படி 360 கிலோமீட்டர் துாரம் அமைக்கப்பட வேண்டி இருக்கும். சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் உடனடியாக பாதாள சாக்கடை அமைக்கப்படும் என அரசு கூறி உள்ள நிலையில் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement