சிவகாசியில் பாதாள சாக்கடை பணி கணக்கெடுப்போடு நிற்குது * மற்ற வேலைகள் துவங்க எதிர்பார்ப்பு
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக முதற்கட்ட பணியான கணக்கெடுப்பு மட்டுமே நடந்துள்ள நிலையில் விரைவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை துவக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி மநகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்க சிவகாசி திருத்தங்கல் இரண்டும் சேர்த்து 179 கிலோமீட்டர் துாரம் பாதாள சாக்கடை அமைக்க கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஆணையூர், விஸ்வநத்தம், நாரணாபுரம், அனுப்பன்குளம், செங்கமல நாச்சியாபுரம் உள்ளிட்ட 9 ஊராட்சிகள் தற்போது மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதாள சாக்கடை திட்டத்தின் படி 360 கிலோமீட்டர் துாரம் அமைக்கப்பட வேண்டி இருக்கும். சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் உடனடியாக பாதாள சாக்கடை அமைக்கப்படும் என அரசு கூறி உள்ள நிலையில் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
-
தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்பு