முன்னாள் நீதிபதி மறைவு போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடு
சென்னை மறைந்த முன்னாள் நீதிபதி ஜனார்த்தனம் உடலை, காவல் துறை மரியாதையுடன் அடக்கம் செய்ய, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஜனார்த்தனம், 89, உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக, 2006 முதல் 2015ம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்துள்ளார்.
இவரது பரிந்துரையின்படி, தமிழகத்தில் சிறுபான்மையினர், அருந்ததியர் இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு உள்ளது. சமூக நீதி வரலாற்றில் தன் முத்திரையை மிகவும் ஆழமாக பதித்தவர். அவரது மறைவு சமூக நீதித் துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு. ஜனார்த்தனம், நீதி துறைக்கும், மாநிலத்திற்கும் ஆற்றிய சேவையை போற்றும் வகையில், அவரது இறுதி நிகழ்வு, காவல் துறை மரியாதையுடன் நடத்தப்படும்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
மேலும்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
-
தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்பு