குப்பைக்கிடங்கை விரைவில் அகற்ற வேண்டும்; த.வெ.க.,
கோவை; 'கோவை வெள்ளலுார் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யத் தவறினால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்' என, த.வெ.க., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
த.வெ.க., கோவை தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ் அறிக்கை:
கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு சேகரமாகும் 1,250 டன் குப்பை, வெள்ளலுார் குப்பைக் கிடங்கில் தான் கொட்டப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்பகுதி மக்கள் உடல் நலக்கோளாறால் அவதிப்படுகின்றனர்.
கடந்த 2018ம் ஆண்டே, தேசிய பசுமைத் தீர்ப்பாயம், இங்கு குப்பை கொட்டக்கூடாது என தீர்ப்பும் வழங்கியது. ஆனால், அதையும் பொருட்படுத்தாமல், குப்பைக் கிடங்கை இடம் மாற்றவில்லை. குப்பைக் கிடங்கை, நவீன மயமாக்குவதை விட, அங்கிருந்து அகற்றுவது தான் நிரந்தர தீர்வு. இதுகுறித்து, கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு; பின்வாங்கிய எலான் மஸ்க்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்