குடும்பத்தினர் கவனிக்காததால் ஆற்றில் குதித்தவர் உயிருடன் மீட்பு
பள்ளிப்பாளையம், கடலுார், புவனகிரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 50; இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களாக, திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் உள்ள தனியார் நுாற்பாலையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு, கை, கால் லேசாக செயலிழந்து உள்ளது. இதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். குடும்பத்தினர் யாரும் கவனிக்காததால், மனமுடைந்த நிலையில் சீனிவாசன் காணப்பட்டார். நேற்று, திருப்பூரில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் வந்துள்ளார்.
ஈரோட்டில் இருந்து நடையாக, 11:00 மணிக்கு பள்ளிப்பாளையம் பகுதிக்கு வந்தார். பின், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தின் மேலே இருந்து ஆற்றில் குதித்துவிட்டார். இதை பார்த்த டெம்போ டிரைவர், வாகனத்தில் இருந்த கயிரை எடுத்து ஆற்றில் வீசினார். கயிற்றை பிடித்த சீனிவாசன் ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்தார்.மேலும், ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் படர்ந்திருந்ததால், சீனிவாசன் அதில் சிக்கிக்கொண்டார். தகவலறிந்து வந்த வெப்படை தீயணைப்பு வீரர்கள், பரிசலில் சென்று ஒருமணி நேர போராட்டத்திற்கு பின், சீனிவாசனை
உயிருடன் மீட்டனர்.
மேலும்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!