கொழுக்கட்டையில் கரப்பான் அங்கன்வாடி ஊழியர் 'சஸ்பெண்ட்'

மதுரை:மதுரையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வினியோகித்த கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து பணியாளர் கோமதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் அங்கன்வாடி மையத்தில் நேற்று குழந்தைகளுக்கு வழங்க கொழுக்கட்டை தயாரானது. அவற்றை பணியாளர் கோமதி விநியோகித்தார். ஒரு குழந்தைக்கு வழங்கிய கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இறந்து இருந்தது. இதை கவனிக்காமல் அந்த பெண் வினியோகித்தார்.

இதுபற்றி குழந்தையின் பெற்றோர் கோமதியிடம் கேட்ட போது, சரியான பதில் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாவட்ட திட்ட அலுவலர் ஷீலாசுந்தரி விசாரணை நடத்தி, கோமதியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement