வரமூர்த்தீஸ்வர் கோவிலில் தேர் திருவிழா விமரிசை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அரியத்துறை கிராமத்தில், பழமை வாய்ந்த மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, அன்ன வாகனம், அதிகாரி நந்தி, சிம்ம வாகனம், நாக வாகனம், திருக்கல்யாணம், யானை வாகனம் உள்ளிட்ட உற்சவங்களும், தினமும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடந்தன.
விழாவின் ஏழாம் நாளான நேற்று, தேர் திருவிழா நடந்தது. காலை 7:00 மணிக்கு, நிலையில் இருந்து புறப்பட்ட தேர் மாடவீதிகள் வழியாக வலம் வந்தது. தேரில் வரமூர்த்தீஸ்வரர் உற்சவ பெருமான் வீற்றிருந்தார். பகர்தர்கள் தேரின் வடம்பிடித்து இழுத்து, நெஞ்சுருக சிவபெருமானை வணங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு; பின்வாங்கிய எலான் மஸ்க்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
Advertisement
Advertisement