சாலையில் கால்நடைகள் உலா வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சோழவரம்:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், காரனோடை பகுதியில் உள்ள இணைப்பு சாலையோரங்களில் நுங்கு, இளநீர் ஆகியவற்றின் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. மேலும், ஹோட்டல், காய்கறி மற்றும் பழக்கடைகளின் உணவு கழிவுகளும் கொட்டப்படுகின்றன.
இந்த குப்பை கழிவுகளில் உணவு தேடுவதற்காக கால்நடைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. மாடுகளின் உரிமையாளர்கள் அவற்றை வீடுகளில் வைத்து பராமரிக்கமால் சாலைகளில் விடுகின்றனர்.
இவை உணவு தேடி சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கும்போது, வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் சாலையை கடக்கும்போது, சிறு சிறு விபத்துகளுக்கும் உள்ளாகின்றனர்.
எனவே, சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதுடன், தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளின் அருகே உணவு கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
-
தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்பு