லாரி மோதி ஒருவர் பலி  

பண்ருட்டி : மொபட்டில் சென்றவர் லாரி மோதி இறந்தார்.

பண்ருட்டி, தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் முருகன்,43; ஆசாரி. இவர் நேற்று காலை மார்க்கெட்டிற்கு மொபட்டில் சென்றார். பின், கும்பகோணம் சாலையில் தன்வந்திரி பெருமாள் கோவில் அருகில் வந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி, மொபட் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement