கறுப்பு ஆடு குறித்து பா.ஜ., விசாரணை

சென்னை: தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம் சொல்லப்படும் முக்கிய தகவல்கள், தி.மு.க., தலைமைக்கு தெரிவது எப்படி என, பா.ஜ., மேலிடம் விசாரித்து வருகிறது.
தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசின் திட்டங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, டில்லியில் இருந்து தமிழக பா.ஜ.,வுக்கு தகவல்கள் தரப்படுகின்றன.
இதற்காக, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன், 'ஜூம் மீட்டிங்' வாயிலாக, ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த விபரங்களை, கட்சியின் நிர்வாகிகள் தங்களின் ஆதரவாளர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர். இந்தத் தகவல்கள், தி.மு.க., தலைமைக்கு செல்கின்றன.
இதுகுறித்து, பா.ஜ., மேலிடத்திற்கு புகார்கள் சென்றுள்ளன. எனவே, இந்த செயலில் யார்
ஈடுபடுகின்றனர் என்பதை, மத்திய உளவுத்துறை வாயிலாக, கட்சி மேலிடம் சேகரித்து வருகிறது. விரைவில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.









மேலும்
-
போதிய பஸ் வசதி இல்லாமல் பொது மக்கள் அவதி: திமுக அரசு மீது இ.பி.எஸ்., சாடல்
-
பேரிடரை எதிர்கொள்ள உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியம் அவசியம்; பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
இந்தியாவில் தீவிர வறுமை குறைந்தது: உலக வங்கி அறிக்கை
-
தனியார் மயமாக்கல்: காங்., தலைவர் குற்றச்சாட்டை நிராகரித்தார் சுற்றுச்சூழல் அமைச்சர்
-
அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு; பின்வாங்கிய எலான் மஸ்க்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு