மனநல பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு வேலை

சென்னை, சென்னை அண்ணாநகரில், 40 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டுவரும், 'ஸ்கார்ப்' எனும் மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம், அதன் பயனாளிகளின் வேலை வாய்ப்பிற்கு உதவி வருகிறது.

இரண்டு ஆண்டுகளாக இந்த நிறுவனம், தங்களிடம் வரும் பயனாளிகள் மட்டுமின்றி, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள, மனநல சிகிச்சைக்கு உட்பட்டு மீண்டுவந்துள்ள அனைவருக்குமான வேலை வாய்ப்பு உதவி மையத்தை நடத்தி வருகிறது.

இதுவரை, 30 நிறுவனங்களின் உரிமையாளர்கள், வேலை வாய்ப்பு அளித்துள்ளனர். அவர்களின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாக, நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், வரும் 14ம் தேதி சனிக்கிழமையன்று, மனநல சிகிச்சை பெற்று மீண்ட நபர்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதில் பங்கேற்க விரும்புவோர், சென்னை, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், வடக்கு பிரதான சாலையில் உள்ள மனச்சிதைவு ஆராய்ச்சி மையத்தை அணுகலாம்.

கூடுதல் தகவலுக்கு, eec@scarfindia.org மின்னஞ்சல், 70103 06290, 95855 28317, 80721 00580 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement