குப்பை தீயிட்டு எரித்ததால் மூச்சுத்திணறல்

சோழிங்கநல்லுார்,ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுார் ஏரி அருகில், காலி இடம் உள்ளது. இப்பகுதியை சிலர், குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்துகின்றனர். நேற்று மதியம், இந்த குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
பிளாஸ்டிக் குப்பையானதால், சோழிங்கநல்லுார் முழுதும் புகை மூட்டமாக மாறியது. அடுக்குமாடி குடியிருப்பில் புகை பரவியதால், அங்கு வசித்தவர்கள் கண் எரிச்சலால் சிரமப்பட்டனர்.
ஒரு மணி நேரம் எரிந்த தீ, தானாக அணைந்தது. காலி இடங்களில் உள்ள குப்பையை அகற்ற, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செல்லும் ஊர் பெயரை காட்டாத டிஜிட்டல் பலகை பரிதவிக்கும் பயணிகள்; பஸ் கண் முன் நின்றும் தவறவிட்டு புலம்பும் மக்கள்
-
நேற்று 18 பேருக்கு காய்ச்சல் முகக்கவசத்தை மறக்காதீங்க...
-
டில்லி உஷ்ஷ்ஷ்: மரணத்திலும் அரசியல்!
-
பங்காளி சண்டையை பிறகு பார்ப்போம்: தினகரன்
-
உருண்டு புரண்டாலும் ஒட்டறது தான் ஒட்டும்!
-
பிரதமரின் பக்ரீத் வாழ்த்தை கேலி செய்த தமிழக அமைச்சர்
Advertisement
Advertisement