சுகாதார வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டு, நேதாஜி நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில், 1999ல், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகத்தில் ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி கழிப்பறை, குளியல் அறை, துணி துவைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்நிலையில், ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்திற்கு தேவையான தண்ணீரை பூர்த்தி செய்வதற்காக ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டு இருந்த நீர்மூழ்கி மின்மோட்டார், 10 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது.
மின்மோட்டாரை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் அதிகளவில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.
எனவே, சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, முறையாக பராமரிக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேதாஜி நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சுகாதார வளாகம் கட்டப்பட்டு, 26 ஆண்டுகள் ஆவதால், கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்தபின், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
மேலும்
-
குவாரி மோசடிக்கு துணை போன அதிகாரிகள்: லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
-
பரமக்குடியில் பகலில் எரியும் தெரு விளக்குகள்: வீணாகும் மின்சாரம்
-
நாரணாபுரத்தில் ஒரு ஆண்டாக கிடப்பில் குடிநீர் தொட்டி பணி
-
பராமரிப்பின்றி கிடக்கும் குளியல் தொட்டிகள் பயன்படுத்த எதிர்பார்ப்பு
-
இயற்கை அழகு கொஞ்சும் நல்ல தண்ணீர் தீவில் அதிகளவில் மயில்கள் நடமாட்டம்; 2010 க்கு பிறகு தடை நிலவுகிறது
-
முதுகுளத்துாரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் காவிரி குழாய்களில் உடைப்பு; குடிநீர் வீணாகிறது