ரயிலில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம், ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் - ஆலப்புழா ரயில் நேற்று காலை, 8:30 மணிக்கு, பொம்மிடி - சேலம் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே வந்து கொண்டிருந்தபோது, போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பின்புற பொதுப்பிரிவு பெட்டியில், கழிப்பறை அருகே, 2 பெரிய பைகள் கேட்பாரற்று கிடந்தன. அதை பிரித்துபார்த்தபோது, 10 பண்டல்களில், கஞ்சா இருந்தது. அதன் எடை, 13 கிலோ. அப்பெட்டியில் பயணித்தவர்களிடம் விசாரித்தும், கடத்தி வந்தவர் யாரென தெரியவில்லை. பையுடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
5 பேர் கைது
அதேபோல் வீராணம் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அல்லிக்குட்டை, தாதம்பட்டியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த, வாய்க்கால்பட்டறையை சேர்ந்த கிரி, 24, தாதம்பட்டி ஈஸ்வரமூர்த்தி, 23, மதியழகன், 21, மதியழகனின் தாய் விஜயா, 50, கோகுல், 23, ஆகியோரை கைது செய்து, 10,000 ரூபாய் மதிப்பில் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
சிவகங்கை மாவட்டத்தில் பக்ரீத் தொழுகை
-
மேம்பாலத்தில் வளரும் மரங்கள்
-
குவாரி மோசடிக்கு துணை போன அதிகாரிகள்: லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
-
பரமக்குடியில் பகலில் எரியும் தெரு விளக்குகள்: வீணாகும் மின்சாரம்
-
நாரணாபுரத்தில் ஒரு ஆண்டாக கிடப்பில் குடிநீர் தொட்டி பணி
-
பராமரிப்பின்றி கிடக்கும் குளியல் தொட்டிகள் பயன்படுத்த எதிர்பார்ப்பு