6 பேரிடம் ரூ.4 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
புதுச்சேரி : ஆன்லைனில் முதலீடு செய்த முத்தியர்பாளையம் பெண் 1.80 லட்சம் ரூபாயை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.
முத்திரையர்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரை தொடர்பு கொண்ட நபர், ஆன்லைனில் முதலீடு பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். இதைநம்பி, அப்பெண் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
முத்தியால்பேட்டையை சேர்ந்த நபருக்கு, கிரெடிட் கார்டு குறித்த குறுஞ்செய்தி வந்துள்ளது. அவர், கிரெடிட் கார்டு விவரங்கள், ஆதார் கார்டு மற்றும் பான் நம்பர் ஆகியவற்றை அனுப்பினார். இதையடுத்து, சிறிது நேரத்தில் அவரது கிரெடிட் கார்டில் இருந்து ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 500 ரூபாயை மோசடி கும்பல் எடுத்துள்ளது.
லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் 30 ஆயிரத்து 400, கிருமாம்பாக்கத்தை சேர்ந்த நபர் 14 ஆயிரத்து 800, கோரிமேட்டைச் சேர்ந்த பெண் 15 ஆயிரம், மூலக்குளத்தை சேர்ந்த பெண் 7 ஆயிரம் என மொத்தம் ஆறு பேர் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 99 ஆயிரத்து 700 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
மேலும்
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
-
எரியாத தெருவிளக்கு, குடிநீர், வாறுகால், வசதி இல்லை--
-
அறுவடைக்கு தயாரான நித்திய கல்யாணி
-
மூன்று வாகனங்கள் மோதி விபத்து : 7 பேர் காயம்
-
போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்குதல் வாலிபர் கைது