கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் ஜல்ஜீவன் திட்ட பணிகளில் தொய்வு; நடவடிக்கை எடுங்க ஆபிசர்

கடலாடி,: கடலாடி யூனியனுக்கு உட்பட்ட 60 கிராம ஊராட்சிகளிலும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் பெருவாரியான ஊராட்சிகளில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டப் பணிகளில் பதிக்கக்கூடிய பைப் மட்டும் குழாய்களில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பைப்புகளை வாங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்படுவதால் இதர நிறுவனங்களின் பைப்புகளை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரர் ஒருவர் கூறியதாவது:

கடலாடி யூனியனுக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டங்கள் குறிப்பிட்ட காலங்களில் விரைந்து முடிக்க கெடு விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பைப்புகளை மட்டுமே வாங்க பரிந்துரைக்கின்றனர், மறுத்தால் வாங்கத்தான் வேண்டும் என நிர்பந்திக்கின்றனர்.

பல்வேறுபட்ட நிறுவனங்களின் ஐ.எஸ்.ஐ., தர சான்றிதழ் மற்றும் முத்திரையிடப்பட்ட தரமான பைப்புகள் கடைகளில் விற்பனை செய்யும் போது குறிப்பிட்ட நிறுவனத்தில் உள்ள பைப்பை மட்டுமே வாங்க வேண்டும் என நிறுவனத்திற்கு ஒப்புதல் கடிதம் கொடுத்து வாங்க சொல்கின்றனர்.

ஒரு லோடு கேட்டால் அவற்றை பெறுவதற்கு அதிக தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் ஜல்ஜீவன் திட்டப்பணிகளை முடிப்பதற்கான நோக்கம் கேள்விக்குறியாகவே உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் தரமான ஐ.எஸ்.ஐ., முத்திரையிடப்பட்ட பைப்புகளை கொள்முதல் செய்வதற்கு ஒர்க் ஆர்டரில் குறிப்பிட்டவாறு வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement