சோழ மண்டல கும்மியாட்டம் அரங்கேற்றம்

காரியாபட்டி : காரியாபட்டி கல்குறிச்சியில் சோழ மண்டல கும்மியாட்டம் முதன்முறையாக பாண்டிய மண்டலத்தில் அரங்கேற்றம் நடந்தது. 100 க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள், ஆண்கள் பங்கேற்று அசத்தினர்.

காரியாபட்டி கல்குறிச்சியில் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு வள்ளி கும்மியாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பவளக்கொடி கும்மி நடன குழு 168வது அரங்கேற்றமாக ஏற்பாடு செய்தனர். இதில் 5 வயது முதல் 60 வயது வரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் 60 நாட்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

இதையடுத்து சோழ மண்டலமான கொங்கு மண்டலத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த கும்மியாட்டம் பாண்டிய மண்டலத்தில் முதல் முறையாக கல்குறிச்சியில் அரங்கேற்றம் செய்தனர்.

பவளக்கொடி குழு ஆசிரியர் விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. கும்மியாட்டக் கலையின் பாரம்பரிய சீருடை அணிந்து சிறுமிகள், பெண்கள், ஆண்கள் நடனம் ஆடினர். இதில் வள்ளி கும்மி, பெருஞ்சலங்கையாட்டம், உரிமியாட்டம் ஆடி அசத்தினர்.

Advertisement