காரியாபட்டியில் நுங்கு விற்பனை அமோகம்
காரியாபட்டி : காரியாபட்டியில் நுங்கு விற்பனை அமோகமாக நடக்கிறது.
கோடையில் கடும் வெயில் காலங்களில் மக்கள் புழுக்கத்தில் அவதிப்படுவர். கடும் வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் உடலில் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும். இதிலிருந்து தப்பிக்க, உடல் சூட்டை தணிக்க இளநீர், நீர் மோர், நுங்கு உள்ளிட்டவைகள் சிறந்தவைகளாக உள்ளன. கோடை காலத்தில் இயற்கையாக விளைந்து பல்வேறு நன்மைகளை தரக்கூடிய நுங்கு வைகாசியில் பலனுக்கு வருகிறது. தற்போது நுங்கு சீசன் களைகட்டி உள்ளது.
காரியாபட்டியில் நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஒரு நுங்கு ரூ. 9 க்கு விற்கப்படுகிறது. வேறு வழியின்றி மக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர். உடல் வெப்பத்தை தணித்து ஆரோக்கியமாக இருக்க சாப்பிடபடும் நுங்கு, திறந்த வெளியில் வைத்து விற்கின்றனர். விரும்பி வாங்க வரும் மக்கள் ஈக்கள் மொய்ப்பதை கண்டு அருவருப்பாக, முகம் சுளிக்கின்றனர்.
மேலும்
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
-
எரியாத தெருவிளக்கு, குடிநீர், வாறுகால், வசதி இல்லை--
-
அறுவடைக்கு தயாரான நித்திய கல்யாணி
-
மூன்று வாகனங்கள் மோதி விபத்து : 7 பேர் காயம்
-
போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்குதல் வாலிபர் கைது