அன்புமணி உடனான பிரச்னை சரி செய்யப்படும்: ராமதாஸ்

சென்னை: '' அன்புமணி உடனான பிரச்னை சரி செய்யப்படும். சரி செய்தால் தான் தேர்தலை சந்திக்க முடியும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களைச் சந்தித்த ராமதாஸ் கூறியதாவது: அன்புமணி உடனான பிரச்னை சரி செய்யப்படும். சரி செய்தால் தான் தேர்தலை சந்திக்க முடியும். வரும் வியாழக்கிழமைக்குள் நல்ல செய்தி வரும். 36 வியாழன் தொடர்ச்சியாக உங்களை சந்தித்து உள்ளேன்.
வரும் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சரியாகத் தான் சொல்லி உள்ளார்.
தற்போது எந்த கட்சியையும் குறை சொல்வதற்கான நேரம் அல்ல. நேரம் வரும்போது, எந்த கட்சியுடன் கூட்டணி என்பது முடிவு செய்த பிறகு கருத்து சொல்லப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
பா.ம.க.,வை பிரிக்க பா.ஜ., முயற்சிக்கிறது என ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ஒவ்வொருவரின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை மனதில் உள்ளதை எப்படி நடக்க வேண்டும், எப்படி செல்ல வேண்டும் என்பதை உடன் இருந்தால் நன்றாக சொல்வார்கள். இல்லை என்றால் வேறு மாதிரி சொல்வார்கள் என்றார்.

மேலும்
-
சென்னை - திருப்பதி நான்கு வழிச்சாலை பசுமையாக மாற்றுது தேசிய ஆணையம்
-
பூங்காவில் மின்கசிவு சிறுவன் 'அட்மிட்'
-
ஆதரவற்ற பெண்கள் வாரியத்தில் சேர இன்றும், நாளையும் முகாம்
-
'கரும்புள்ளி' பகுதிகளில் முன் மாதிரி திட்டம் புதிய முயற்சியில் தமிழக போலீஸ்
-
ஐஸ்கிரீம் வியாபாரி தீக்காயத்துடன் மீட்பு
-
திருவொற்றியூர், மணலியில் தொடரும் மின்தடையால் அவதி