பூங்காவில் மின்கசிவு சிறுவன் 'அட்மிட்'

பூந்தமல்லி,:பூந்தமல்லி நகராட்சியில், சி.எம்.ஆர்., நகரில் பூங்கா உள்ளது. நேற்று மாலை, மழை நின்ற பின், பூங்காவுக்குள் சிறுவர்கள் விளையாட சென்றனர்.

அப்போது, மின் விளக்கு கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டதில், அதே பகுதியைச் சேர்ந்த மித்ரன், 12, என்ற சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது.

அங்கிருந்தோர் சிறுவனை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Advertisement