முட்டகுறிச்சி பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிேஷகம்

இளையான்குடி: இளையான்குடி அருகே முட்டகுறிச்சி பத்திரகாளியம்மன் கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஜூன் 6 ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து மகாலட்சுமி, நவக்கிரஹ ேஹாமம் நடந்தது. அன்று மாலை 4:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையும், ஜூன் 7 ம் தேதி 2 மற்றும் 3 ம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தது. நேற்று காலை முதல் கும்பாபிேஷக யாகசாலை, பூர்ணாஹூதி நடந்தது. அர்ச்சகர்கள் புனித நீர் கலசத்தை ஏந்தி, கடம்புறப்பாடு நடந்தது. நேற்று காலை 10:45 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினர். பரிவார தெய்வங்களுக்கும் அபிேஷகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஏற்பாட்டை ஹிந்து சத்திரிய நாடார் உறவின் முறையினர், திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement