கைலாசநாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ஓசூர்: ஓசூர், டி.வி.எஸ்., நகரில், தளி செல்லும் சாலையோரமுள்ள எல்லம்மா தேவி மற்றும் கைலாசநாதேஸ்வரர் கோவில் கும்பாபி-ஷேக விழா நேற்று முன்தினம் துவங்கியது.
நேற்று காலை, 10:00 மணிக்கு, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவரான கோவில் அறங்காவலர் தலைவர் சென்னீரப்பா ஆகியோர், எல்லம்மா தேவி மற்றும் கைலாசநாதேஸ்வரர் கோவி-லுக்கு புனித நீர் ஊற்றி, தீபாராதனை காண்பித்து கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். முன்னதாக, பெண்கள் புனித நீரை தலையில் சுமந்து, மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். ஹிந்து சமய அறநிலையத்துறை ஓசூர் சரக ஆய்வாளர் சக்தி, கோவில் அறங்காவலர் உறுப்பினர்கள் சரோஜா, நாகராஜ் உட்பட ஏராள-மான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.*மத்துார் அடுத்த, கண்ணன்டஹள்ளி பஞ்.,, ஜெ. ஆர்.,நகரி-லுள்ள அலர்மேல் மங்கை தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் சுற்று வட்டா-ரத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும்
-
வாய்க்காலில் கொட்டப்பட்ட 200 கிலோ சத்து மாத்திரை; சுகாதாரத்துறை நடவடிக்கைக்கு பரிந்துரை
-
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலி
-
வெண்டைக்காய் விலை வீழ்ச்சி
-
ஸ்ரீரங்க பூபதி பார்மசி கல்லூரி ஆண்டு விழா
-
பட்டீஸ்வரம் கோவிலில் 150 ஆண்டுக்கு பின் தேரோட்டம்
-
பழனியில் வைகாசி விசாக திருவிழா திருக்கல்யாணம்