கச்சத்தீவை மீட்கக் கோரி ராமேஸ்வரத்தில் ஜூன் 27ல் மாநாடு
ராமநாதபுரம்: கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி ஜூன் 27 ல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் விவசாயிகள், மீனவர்கள் ஒற்றுமை மாநாடு நடத்தப்படவுள்ளது.
ராமேஸ்வரத்தில் மீனவர்கள், விவசாயிகள் அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று நடந்தது. டில்லி போராட்ட தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் ரஜ்விந்தர்சிங்கோல்டன், விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அர்ச்சுணன், மாவட்ட செயலாளர் மலைச்சாமி, கோவை நிர்வாகி பாரூக்ஜூக்ராஜ் சிங், அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் சேசுராஜா, பொருளாளர் சகாயம், துணைத்தலைவர் ஆல்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் 'கச்சத்தீவை மீட்போம்' என்ற முழக்கத்துடன் மீனவர்கள், விவசாயிகள் ஒற்றுமை மாநாடு ஜூன் 27 ல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் சங்க அர்ச்சுணன் கூறியதாவது: 1960ல் உலக வங்கி மத்தியஸ்தத்தில் நடந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது போல 1974ம் ஆண்டு இந்திய இலங்கை அரசுகள் செய்த கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்திட வேண்டும்.
மீனவர்களின் விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாக்கவும், ரூ.பல கோடி மதிப்பிலான மீனவர்களின் படகுகள் மற்றும் உடமைகளை பாதுகாத்திடவும் வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் இந்த ஒற்றுமை மாநாடு நடத்தப்படவுள்ளது என்றார்.
மேலும்
-
தொடர்ந்து உயரும் பாதிப்பு: கொரோனாவுக்கு 4 பேர் பலி
-
வன உயிரினங்களை பாதுகாக்க 20,000 மாணவர்களுக்கு பயிற்சி
-
மதுபானம் கடத்திய வாலிபர் கைது
-
வாய்க்காலில் கொட்டப்பட்ட 200 கிலோ சத்து மாத்திரை; சுகாதாரத்துறை நடவடிக்கைக்கு பரிந்துரை
-
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலி
-
வெண்டைக்காய் விலை வீழ்ச்சி