சாக்கடையில் விழுந்த ஊழியர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு
துாத்துக்குடி: பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த தொழிலாளி விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலை சுற்றிய பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனை பின்புறம் கழிவுநீர் வெளியேறியதால், அங்கிருந்த பாதாள சாக்கடை மூடியை சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, கங்கைகொண்டானை சேர்ந்த மணி, 40, என்ற மாற்றுத்திறனாளி தொழிலாளி எதிர்பாராதவிதமாக பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்தார்.
தீயணைப்பு துறையினர் வருவதற்குள், விஷவாயு தாக்கி மணி உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பின்வாசல் வழியாக ஸ்டெக்சரில் கொண்டு சென்றபோது, திடீரென உடலை கீழே தவறவிட்டனர். இதை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருச்செந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
தொடர்ந்து உயரும் பாதிப்பு: கொரோனாவுக்கு 4 பேர் பலி
-
வன உயிரினங்களை பாதுகாக்க 20,000 மாணவர்களுக்கு பயிற்சி
-
மதுபானம் கடத்திய வாலிபர் கைது
-
வாய்க்காலில் கொட்டப்பட்ட 200 கிலோ சத்து மாத்திரை; சுகாதாரத்துறை நடவடிக்கைக்கு பரிந்துரை
-
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலி
-
வெண்டைக்காய் விலை வீழ்ச்சி