மீன் இறங்கு தளத்தில் ஓட்டை ஐஸ் லாரி சிக்கியதால் பரபரப்பு

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில், மீன் இறங்குதளம் 2015ல் புதிதாக கட்டப்பட்டது. இங்கு, லாரிகளில் கொண்டு வரப்பட்ட ஐஸ் கட்டிகளை படகுகளில் ஏற்றும் பணி நடந்து கொண்டிருந்தது.
ஒரு லாரியில் இருந்து படகில் ஐஸ் கட்டிகள் இறக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென மீன் இறங்குதளத்தில் ஓட்டை ஏற்பட்டது. ஐந்தடி சுற்றளவுக்கு ஏற்பட்ட பெரிய ஓட்டையில், லாரி சிக்கியதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ராட்சத கிரேன் உதவியுடன் பல மணி நேர போராட்டத்திற்கு பின், அந்த லாரியை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். பழுதடைந்த மீன் இறங்குதளத்தை, உடனடியாக புதுப்பித்து தர வேண்டும் என, தருவைகுளம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடர்ந்து உயரும் பாதிப்பு: கொரோனாவுக்கு 4 பேர் பலி
-
வன உயிரினங்களை பாதுகாக்க 20,000 மாணவர்களுக்கு பயிற்சி
-
மதுபானம் கடத்திய வாலிபர் கைது
-
வாய்க்காலில் கொட்டப்பட்ட 200 கிலோ சத்து மாத்திரை; சுகாதாரத்துறை நடவடிக்கைக்கு பரிந்துரை
-
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலி
-
வெண்டைக்காய் விலை வீழ்ச்சி
Advertisement
Advertisement