தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் தமிழக விவசாயிகள் சங்கம் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பால் உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ராஜா வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் மாசிலாமணி, ராதாகிருஷ்ணன், சிவா, முனிரத்தினம், செல்வராஜ், கிழக்கு மாவட்ட தலைவர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ராமகவுண்டர் பேசினார்.


கூட்டத்தில், ஊத்தங்ரை, 33 ஏரிகள் இணைப்பு திட்டத்தில் இமாம்சாயபு ஏரியிலிருந்து குருகப்பட்டி ஏரி வழியாக ரெட்டிப்-பட்டிஏரியை இணைக்க வேண்டும். ரெட்டிப்பட்டி ஏரிக்கரை வழியாக அரூர் தேசிய நெடுஞ்சாலை வரை தார்ச்சாலை அமைக்க வேண்டும். பாவக்கல், பெருமாள் கவுண்டன் ஏரிக்கும், நல்ல-வம்பட்டி ஏரிக்கும் பாம்பாறு கால்வாயுடன் இணைப்பு வழங்க வேண்டும். கிருஷ்ணகிரியில் வரும் ஜூலை, 5ல் உழவர் தின பேரணி மற்றும் நாராயணசாமியின், 100வது பிறந்த நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொல்வது என தீர்மானிக்கப்பட்டது. வடிவேல் நன்றி கூறினார்.

Advertisement