வாழ தகுதியற்ற மாநிலமாக மாறி வரும் தமிழகம்

அண்மைக் காலங்களில், தோட்டத்து வீடுகளில் தனியாக வாழ்ந்து வரும் முதியோர் படுகொலை செய்யப்படுகின்றனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரை அடுத்த சீத்தம்பூண்டியில், தனியாக வாழ்ந்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி நேற்று முன்தினம் கொல்லப்பட்டுள்ளார். ஈரோடு கொலையில், நான்கு பேரை கைது செய்த போலீசார், அவர்கள் தான் பல்லடம் கொலையையும் செய்ததாக கூறி வழக்குகளை முடித்தனர்.
இப்போது, பரமத்தி வேலுார் அருகே, மேலும் ஒரு கொலை நடந்துள்ளது. இந்தக் கொலையை செய்தவர்கள் யார்? குற்றவாளிகளைப் பிடித்து விட்டதாக நாடகமாடிய தி.மு.க., அரசின் முகமூடி கிழிந்து விட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 7,000க்கும் மேற்பட்ட படுகொலை நடந்துள்ளன. சராசரியாக தினமும் ஐந்து பேர் கொல்லப்படுகின்றனர். சாலையில் சென்றாலும், வீடுகளில் இருந்தாலும் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. மொத்தத்தில் தமிழகம் வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது.
- அன்புமணி
தலைவர், பா.ம.க.,

மேலும்
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
-
'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம் தனி புத்தகமாக வெளியிடணும்'