பிள்ளையார் கோவில் துறை மக்கள் கலெக்டருக்கு மனு

கோபி: கோபி அருகே பிள்ளையார் கோவில் துறை பகுதியை சேர்ந்த மக்கள் சிலர், ஈரோடு கலெக்டருக்கு பதிவு தபாலில் கடிதம் அனுப்பியுள்ளனர். கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:


கோபி அருகே பிள்ளையார் கோவில் துறை பஸ் ஸ்டாப்பில், அனைத்து பஸ்களும் நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல, 2018ல் அப்போதைய வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவு வழங்கினார். இதன்படி அரசு பஸ்கள் நின்று செல்கின்-றன. ஆனால், தனியார் பஸ்கள் சரியாக நிற்பதில்லை. இதுகு-றித்து பல முறை கலெக்டருக்கும், கோபி வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் புகார் அனுப்பியும், பஸ்கள் நிற்பதில்லை. தனியார் பஸ்கள் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Advertisement