மாநகராட்சி 45வது வார்டில் பாலம் கட்ட தோண்டிய குழியால் துாக்கம் போச்சு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 45வது வார்டுக்கு உட்பட்ட மரப்பாலம், பொற்கை பாண்டியன் வீதி-சம்பந்தம் வீதி இடையே தரைமட்ட பாலம் அமைக்க, இரு மாதங்களுக்கு முன் குழி தோண்டினர்.

விரைவில் தரைமட்ட சிறுபாலம் அமைக்கப்படும் என்று மக்கள் நினைத்தனர். ஆனால் இதுவரை எவ்வித பணியும் மேற்கொள்-ளப்படவில்லை. மாறாக பாலம் அமைக்க தோண்டிய குழியில் சாக்கடை கழிவுநீர் குளம் போல் தேங்கி, கொசு உற்பத்தியை அதி-கரிக்க செய்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் துாக்-கத்தை இழந்துள்ளனர். இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது: மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தரைமட்ட பாலம் அமைக்க வேண்டும். அதற்கு முன் தேங்கிய சாக்கடை கழிவு நீரை அப்பு-றப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement