மாநகராட்சி 45வது வார்டில் பாலம் கட்ட தோண்டிய குழியால் துாக்கம் போச்சு
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 45வது வார்டுக்கு உட்பட்ட மரப்பாலம், பொற்கை பாண்டியன் வீதி-சம்பந்தம் வீதி இடையே தரைமட்ட பாலம் அமைக்க, இரு மாதங்களுக்கு முன் குழி தோண்டினர்.
விரைவில் தரைமட்ட சிறுபாலம் அமைக்கப்படும் என்று மக்கள் நினைத்தனர். ஆனால் இதுவரை எவ்வித பணியும் மேற்கொள்-ளப்படவில்லை. மாறாக பாலம் அமைக்க தோண்டிய குழியில் சாக்கடை கழிவுநீர் குளம் போல் தேங்கி, கொசு உற்பத்தியை அதி-கரிக்க செய்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் துாக்-கத்தை இழந்துள்ளனர். இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது: மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தரைமட்ட பாலம் அமைக்க வேண்டும். அதற்கு முன் தேங்கிய சாக்கடை கழிவு நீரை அப்பு-றப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுபோதையில் தண்டவாளத்தில் கற்களை போட்டு அட்டகாசம் செய்த நால்வர் கைது சிக்னல் கிடைக்காததால் சேரன் எக்ஸ்பிரஸ் தப்பியது
-
பத்திரிக்கையாளர் மீது உருட்டு கட்டை தாக்குதல்
-
அமெரிக்காவில் வெடித்த கலவரம்; கடும் நடவடிக்கை எடுக்க டிரம்ப் உத்தரவால் பரபரப்பு
-
2 கிலோ கஞ்சா சாக்லேட் கடத்தியவர்களுக்கு வலை
-
சத்யவதி என்ன தவறு செய்தார்? முதல்வர் சித்தராமையா 'வக்காலத்து'
-
இன்று முதல் மீண்டும் மழை துவக்கம்
Advertisement
Advertisement