திருடிய ஆட்டுடன் பைக்கில் வந்து வசமாக சிக்கிய 2 பேருக்கு 'காப்பு'

ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாலத்தை சேர்ந்தவர் குணசே-கரன், 54. தறித்தொழில் செய்து வருகிறார். குலதெய்வ கோவி-லுக்கு பலி கொடுக்க, 2 ஆடுகளை வாங்கி வீட்டில் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, ஆடுகளை கட்டிப்போட்டு துாங்கச்சென்றார். நேற்று காலை பார்த்தபொது, ஒரு ஆட்டை காணவில்லை. அவர் புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்தனர்.


இந்நிலையில் ஆட்டையாம்பட்டி அருகே கண்டர்குலமாணிக்க-தத்தில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, 'பல்சர்' பைக்கில், 2 பேர், ஒரு ஆட்டுடன் வந்-ததால் நிறுத்தி விசாரித்தனர். அதில் இளம்பிள்ளையில் தறி ஓட்டி வரும் பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்த வடிவேல், 24, கொம்-பாடிப்பட்டி மோகன்ராஜ் 22, என்பதும், ஆட்டை திருடி வந்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், ஆட்டை மீட்டு, பைக்கை பறிமுதல் செய்தனர்.

Advertisement