திருடிய ஆட்டுடன் பைக்கில் வந்து வசமாக சிக்கிய 2 பேருக்கு 'காப்பு'
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாலத்தை சேர்ந்தவர் குணசே-கரன், 54. தறித்தொழில் செய்து வருகிறார். குலதெய்வ கோவி-லுக்கு பலி கொடுக்க, 2 ஆடுகளை வாங்கி வீட்டில் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, ஆடுகளை கட்டிப்போட்டு துாங்கச்சென்றார். நேற்று காலை பார்த்தபொது, ஒரு ஆட்டை காணவில்லை. அவர் புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில் ஆட்டையாம்பட்டி அருகே கண்டர்குலமாணிக்க-தத்தில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, 'பல்சர்' பைக்கில், 2 பேர், ஒரு ஆட்டுடன் வந்-ததால் நிறுத்தி விசாரித்தனர். அதில் இளம்பிள்ளையில் தறி ஓட்டி வரும் பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்த வடிவேல், 24, கொம்-பாடிப்பட்டி மோகன்ராஜ் 22, என்பதும், ஆட்டை திருடி வந்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், ஆட்டை மீட்டு, பைக்கை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
-
'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம் தனி புத்தகமாக வெளியிடணும்'
Advertisement
Advertisement