விநாயகர், ஓம் சக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த சேசம்பட்டியில், விநாயகர், ஓம்சக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 29ல் மங்கள இசை முழங்க, கொடியேற்றத்துடன் துவங்கி-யது. கடந்த, 6ல் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உட்பட பல்-வேறு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. பின்னர் மூலவர் தெய்-வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.


விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. பின், விநா-யகர், ஓம்சக்தி அம்மன் கோவில், விமான கோபுர கலசங்கள் மற்றும் மூலவர், பாரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்-பாபிஷேக விழா விமர்சையாக நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடு-களை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement