வனத்தில் குவியும் பிளாஸ்டிக் குப்பை

அரூர்: அரூரில் இருந்து, கடத் துார் செல்லும் சாலையில், குரங்கு-பள்ளம் அருகே, அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது.

இங்கு, மதுபானங்களை வாங்கும் குடிமகன்கள், அருகிலுள்ள வனப்பகு-தியில், மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பின், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்-களை, அப்பகுதியில் குடிமகன்கள் வீசிச்செல்வதால், பிளாஸ்டிக் குப்பை மலை போல் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பிளாஸ்டிக் குப்பையை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் சாப்பிட்டு, உயிரிழக்கும் அபாயம் உள்ளதால், அவற்றை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement