பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூல்

தர்மபுரி: தர்மபுரி நகர் மற்றும் புறநகர் பஸ் ஸ்டாண்டிலுள்ள, கட்டண கழிப்பறைகள், நகராட்சி மூலம் தனியாருக்கு ஏலம் விடப்பட்டுள்-ளன. அங்கு சிறுநீர் கழிக்க ஒரு ரூபாய், மலம் கழிக்க, 3 ரூபாய் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.


ஆனால், பொதுமக்களிடமிருந்து 5 ரூபாய் வசூல் செய்யப்படுகி-றது. கட்டணம் குறித்து கேட்டால், அங்கு பணியில் உள்ளவர்கள் கூறும் கட்டணத்தை தரா விட்டால், கழிவறைக்கு செல்ல அனு-மதி மறுக்கின்றனர். இதனால், பொதுமக்கள் வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் கொடுத்து செல்கின்றனர். இந்நிலையில், கழிப்பறையை முறையாக பராமரிக்காததால், கழிப்பறையில் துர்-நாற்றம் வீசுகிறது. இதனால், மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுப்ப-துடன், கழிப்பறையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement